சென்னை, கோவை போன்ற நகரங்களில் பல பண்பலைகள் (எஃப்.எம்.) இருப்பதைப் போல, அமீரகத்திலும் குறைந்தது 30-40 எஃப்.எம். சேனல்கள் உள்ளன. அவற்றுள் இந்தி, அரபி, ஆங்கிலம், மலையாளம் என பல மொழிகளிலும் ஒலிபரப்பாகின்றன. தினமும் அலுவலகத்திற்கும் செல்லும் பொழுது எனக்கு இந்தி அல்லது மலையாள எஃப்.எம் சேனல்களைக் கேட்பது வழக்கம். மலையாளச் சேனல்களில் இடையிடையே தமிழ்ப்பாடல்களைப் ஒலிபரப்புவதுண்டு!!
o
இன்று ஒரு இந்தி எஃப்.எம் சேனலைக் கேட்டுக் கொண்டிருந்த பொழுது இரண்டு ரேடியோ ஜாக்கிகள் பேசிக்கொண்டது வியப்பாகவும், சிந்திக்கும் படியாகவும் இருந்தது..
"நேற்றும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் டீம் தோற்றுவிட்டதே..."என்ற முதலாமவர்
"ஆமா.. அவங்க டீம்ல சரியான பேட்ஸ்மேன் இல்ல.. அதனால தான்.." என்று பதிலளித்தார் இரண்டாமவர்.
"நீ போய் ஆட வேண்டியது தான?"
"ஹா.ஹா.. நான் உன் கிட்ட ஒரு கேள்வி கேட்கட்டுமா? ஒரு பந்தில் இருபத்தி நாலு ரன் எடுக்க முடியுமா?"
"அது எப்படி?"
"ரஜினிகாந்த அனுப்பினாப் போதும். ஒரே பாலில் 24 ரன் எடுத்திருவார்.."
"ஹேய்.. என்ன சொல்ற?"
"ஒரு பந்தை அடிக்கும் பொழுது, அது நாலு பந்தா உடைஞ்சு, நாலும் பவுண்டரிக்கு வெளிய போய் விழும். அப்போ 24 ரன் தானே??" என்று கூறி "கெக்கெக்கே"வென்று சிரித்தர் இரண்டாமவர்..
o
ரஜினிகாந்தை வைத்துப் பல காமெடிகள் அவ்வப்பொழுது வட இந்தியர்கள் அனுப்பும் மின்னஞ்சலில் வருவதுண்டு. பல முறை, அலுவலக உணவு வேளையின் பொழுது ரஜினியைப் பற்றி, அவரது தனித்தன்மையான "ஸ்டைல்" பற்றியெல்லாம் பேச்சு வந்தாலும், வட இந்தியர்கள் மத்தியில் ஒரு "கிண்டல்" தொணி இருக்கத்தான் செய்கிறது.
இது எதனால்? நம் ரசனையின் மீதான கிண்டலா? அல்லது, பொதுவாக தமிழர்களின் திறமையின் மீதான் காழ்ப்புணர்ச்சியா?
ஒவ்வொரு மாநிலத்தவரும், மொழி பேசுபவரும் அடுத்த மாநிலத்தவரைக் கிண்டல் செய்யும் போக்கு நமக்கு அதிகமாகவே இருக்கத்தான் செய்கிறது!! இதில் நாமும் சளைத்தவர்கள் இல்லை. மலையாளம், தெலுங்கு, வங்காள, இந்தி மொழி பேசுபவர்களை வைத்து நாமும் பரவலாகக் கிண்டலடித்துக் கொண்டு தான் இருக்கிறோம். இதில் ஊடகங்களில் பங்கு மிகவும் முக்கியமானது.
இது உருவாக்கும் பிம்பம் என்ன? ஒருவர் "இந்த மாநிலத்தவர்" என்று நினைக்கும் பொழுது என்ன எண்ணம் உருவாகிறது?
பிகாரைச் சேர்ந்தவர் என்ற பொழுது லல்லுப்பிரசாத்தும், சட்ட ஒழுங்கின்மைதான் நினைவிற்கு வருகின்றன. பஞ்சாபைச் சேர்ந்த சிங்க் என்றவுடன் சர்தார்ஜி ஜோக்குகளும், குஜராத் என்றவுடன் கோத்ரா கலவரமும் தான் நினைவிற்கு வருகின்றன. இது தான் ஒவ்வொரு மாநிலத்தைப் பற்றி நம் மனதில் ஏற்பட்டிருக்கும் அடையாளம்!! பிம்பம்!!
ஐ.ஐ.டி.யில் சேரும் மாணவர்களுள் பிகாரைச் சேர்ந்தவர் எண்ணிக்கை தமிழகத்தை விட அதிகம். இந்தியாவிலேயே வளமான மாநிலமும், தனி நபர் வருமானத்தில் சிறப்பான இடமும் பஞ்சாம் மாநிலத்தவர்க்குத் தான். குஜராத் மாநிலம் தொழில்துறை, உள்கட்டமைப்பு போன்றவற்றுள் அடைந்துள்ள இடத்தைப் பிடிக்க, நமக்குக் குறைந்தது 10 ஆண்டுகள் தேவைப்படுமாம்.
ஆனால், இது போன்ற விசயங்கள் நம் மனதில் பதிவதை விட ஊடகத் திணிப்பால் உருவான பிம்பம் தான் நம் மனதில் பதிகிறது.
o
தமிழகத்தின்/தமிழக மக்களின் அடையாளமாக பத்து விசயங்களைச் சொல்லச் சொன்னால் எவற்றைச் சொல்வோம்?
1. தமிழ் மொழி.
2. தமிழின் தொன்மையான நூல்கள்
3. தமிழக வரலாற்றுச் சின்னங்கள்/ நகரங்கள்/சுற்றுலத்தலங்கள்.
4. தமிழர்களின் கலைகள்
5. உயர்ந்த காடுகள் முதல் பரந்த கடல் வரை உள்ள தமிழக நில வளம்.
6. தமிழ் மக்களின் மனித வளம். எந்தத் துறையானாலும் திறமையான வல்லுனர்கள், தொழிலாளர்கள் கிடைப்பது.
7. தொன்மையான மருத்துவ முறைகள்.
8. தொழில்நுட்பத்துறை ஆய்வகங்கள், கண்டுபிடிப்புகள்
9. சென்னை, கோவை போன்ற தொழில்துறை நகரங்கள்..
10. பல்துறை அறிஞர்கள், கலைஞர்கள்.
ஆனால்.. தமிழகத்தைப் பற்றிய அடையாளமாக இருப்பவை எவை?
"ஹாய் செந்தில்.. இஸ் எவ்ரிதிங் ஃபைன் வித் சவுத்? அம்மா, ரஜினி ஆல் ஃபைன்?" என்ற கேள்வியை இரண்டு நாட்களுக்கு ஒரு முறை கேட்கும் நண்பர்கள் எனக்கு இருக்கிறார்கள்!! அவர்களைக் குறை கூறி ஒன்றும் செய்வதற்கில்லை!!
o
"நீங்கள் இறந்து விட்டீர்கள்!! இரங்கல் கூட்டம் நடக்கிறது!! உங்களைப் பற்றி ஒவ்வொருவராகக் கருத்துகளைக் கூறுகிறார்கள்!! உங்களைப் பற்றிப் பல கருத்துகளைக் கூறுகிறார்கள்!! நண்பர்கள், உறவினர்கள், சமூகத்தைச் சேர்ந்தவர்கள் என ஒவ்வொருவராக உங்களைப் பேசுகிறார்கள்!!
சிலர் உங்களைப் பற்றி பேசும் பொழுது, 'நாம் எதிர்பார்த்த படி இவர்கள் பேசவில்லையே' என்று உங்கள் மனம் வருந்துகிறது.
உங்கள் சாவின் இரங்கல் கூட்டத்தில் உங்களைப் பற்றி என்ன கூறினால் மகிழ்ச்சியடைவீர்கள்?"
"Stephen Coveyன் 7 Habits of Highly Effective People" என்ற நூலில் இடம்பெறும் வரிகள் இவை!!
சிலர் உங்களைப் பற்றி பேசும் பொழுது, 'நாம் எதிர்பார்த்த படி இவர்கள் பேசவில்லையே' என்று உங்கள் மனம் வருந்துகிறது.
உங்கள் சாவின் இரங்கல் கூட்டத்தில் உங்களைப் பற்றி என்ன கூறினால் மகிழ்ச்சியடைவீர்கள்?"
"Stephen Coveyன் 7 Habits of Highly Effective People" என்ற நூலில் இடம்பெறும் வரிகள் இவை!!
இந்த வரிகள் அனைவருக்கும் பொருந்தும்!! தனி நபர்க்கும் பொருந்தும், ஒரு குழுவிற்கும் பொருந்தும், ஒரு இனத்தவர்க்கும் பொருந்தும்!!
ரஜினியைக் கிண்டலடித்த ரேடியோ ஜாக்கியைப் பற்றி நினைத்து என்ன செய்ய?
o
ம்ம்... தமிழ்ப் பதிவர்களையும், பதிவுலகத்தைப் பற்றிய பிம்பம் எப்படி இருக்க வேண்டும்?
இப்பொழுது எப்படி இருக்கிறது?
o