நம்ம கோயம்புத்தூர் பக்கம் இருக்கற இளந்தாரிப் பசங்களுக்கு சித்திரை மாசம் பௌர்னமி வந்திருச்சுன்னா, வெள்ளியங்கிரி மலைக்கு போறத பத்தித்தான் பேச்சு!!
ஏப்பா, இளந்தாரிப்பசங்க ஊட்டி, கொடைக்கானல் போறத தான் பாக்க முடியும். இது என்ன புதுசா இருக்கேனு நினைச்சீங்கன்னா, வெள்ளியங்கிரி மலை பற்றி ஒரு அறிமுகம்!!
கோவை அருகே உள்ள மேற்குத் தொடர்ச்சி மலையில் உள்ள வெள்ளியங்கிரி மலை ஒரு வழிபாட்டுத்தலம். ஏழு மலை கடந்து மலை உச்சிக்குச் சென்றால் நாம் தரிசிப்பது ஒரு சிவலிங்கம். ஈஷா யோகா மையம் இருப்பதும் வெள்ளியங்கிரி மலை அடிவாரத்தில் தான்!!

நாம் வழக்கமாக செல்லும் திருப்பதி, பழநி போன்ற மலைகளுக்கு இருக்கற மாதிரி பேருந்துகளோ, வின்ச் சர்வீஸோ வெள்ளியங்கிரி மலைக்கு கிடையாது. இங்கே இருப்பதெல்லாம், "நடைராஜா சர்வீஸ்" தான்!! மேலும், மற்ற வழிபாட்டுத் தலங்களுக்கு எல்லா நாட்களும் போக முடியும். ஆனால், வெள்ளியங்கிரி மலைக்கு, சித்திரா பௌர்னமிக்கு பிறகு வரும் 10 நாட்கள் மட்டும் தான் செல்ல முடியும். அதுவும் இரவில் தான். பகலில் என்றால் வெயில் சுட்டெரித்துவிடும். கரடு முரடான பாதையைக் கொண்ட இந்த மலைக்கு மின்சார வெளிச்சம் கிடையாது. நடந்து செல்பவர்களுக்கு இருக்கும் ஒரே ஒளி நிலவொளிதான்!! இதனால தான் தேய்பிறை காலத்துல மலை ஏறுவதும்!!
சித்திரை மாதத்தில் மட்டும் மலை ஏறுவதற்கும் ஒரு காரணம் காட்டில் உள்ள யானை, மான் போன்ற மிருகங்கள் எல்லாம் தண்ணீரைத் தேடி மலைக்குக் கீழே சென்றிருக்குமாம். சித்திரை மாத்திற்கு பிறகு என்றால், தென்மேற்குப் பருவ மழை பெய்ய ஆரம்பித்து விடும். கடும்குளிர் காரணமாக குளிர்காலத்திலும் மக்கள் இங்கே போவது கிடையாது.
நிலவொளியில், நண்பர்களுடன் மலை ஏற்றம், கரடு முரடான மலைப்பாதை என கேட்க சுவாரஸ்யமா இருக்கா?
இத விட சுவாரஸ்யம் மலைப்பாதை தான். ஒவ்வொரு மலையும் ஒவ்வொரு விதம். இப்படி மலை ஏர்றதுக்கு முன்னாடி 4 அடி உயரம் உள்ள ஒரு மூங்கில் குச்சியை வாங்கறது மிகவும் அவசியம்!!
பத்து மணி வாக்கில் முதல் மலையை ஏற ஆரம்பித்தால், லேசாக வியர்க்க ஆரம்பிக்கும். முதல் மலை முழுவதும், கற்களால் ஆனா படிக்கட்டுகள் கட்டப்பட்டிருக்கும். ஒவ்வொரு படியும் அரை அடி முதல் ஒரு அடி வரை உயரம் இருக்கும். ஒரு அரை மணி கழிந்த பிறகு நாம் அணிந்திருக்கும் பணியன், சட்டை எல்லாம் கசக்கிப் பிழியும் அளவிற்கு வியர்த்து விடும். முதல் மலை மட்டும் ஒரு நாலு பழநி மலை அளவிற்கு உயரம் இருக்கும். அப்படியே, ஏறி வரும் போது நம்முடன் வரும் நண்பர்கள் புலம்ப ஆரம்பிப்பது...
"மாப்ளே, இன்னும் முதல் மலையே முடியல.. என்னால இதுக்கு மேல ஏற முடியல.. நீங்க வேணா போயிட்டு வாங்க!!" என்பது தான்.
ரெண்டாவது மலைக்கு வந்துட்டோம்கறது, படிகள் குறைய ஆரம்பிக்கறதுல இருந்து தெரிஞ்சுக்கலாம். ரெண்டாவது மற்றும் மூனாவது மலை முழுவதும் வழுக்குப் பாறைகளை செதுக்கி படிகள் கட்டி விட்டுருப்பாங்க. இது மாதிரி வழுக்கப் பாதைகளில் விழுந்திராமல் இருக்கத்தான் மூங்கில் குச்சிய வாங்க சொல்றது!!
அடர்ந்த மரங்களின் நடுவே சென்ற பயணம், மரங்களின் அடர்த்தி குறைய ஆரம்பித்து "சோலா" எனப்படும் சிறிய தாவரங்களைப் பார்க்க நேர்ந்தால், நாம் கடப்பது ஐந்தாவது மலையை என்று அர்த்தம்!! ஐந்தாவது மலை முழுவதும் சேறு போன்ற வழுவழுப்பான மண்ணப் பார்க்கலாம். இங்கே நன்றாக குளிரவும் ஆரம்பிக்கும். ஐந்தாவது மலையின் உச்சியில் செல்லும் போது, மலைவாசிகளின் கடையில் அஞ்சு ரூபாக்கு ஒரு சுக்கு காப்பி கிடைக்கும் பாருங்க.. அந்தக் குளிர்ல, சுக்குக் காப்பிக்கு நிகர் வேறெதுவும் கிடையாது.
ஐந்தாவது மலையில் இருந்து ஆறாவது மலைக்கு உட்
கார்ந்தும் டேக்கியும் தான் போகனும். ஏன்னா, ஆறாவது மலைக்குச் செல்ல செங்குத்தாக கீழே போக வேண்டும். கீழ இறங்கும் போது, அப்படியே அன்னாந்து மேலே பார்த்தா, கண்ணுக்கு எட்டுன தூரம் வரைக்கும் "மின்மினி பூச்சி" மாதிரி வெளிச்சம் தெரியும். ஏழாவது மலைல நமக்கு முன்னாடி ஏறீட்டு இறக்கறவங்க அடிக்கற "டார்ச் லைட்" வெளிச்சம் தான் அது.
அடுத்து ஏழாவது மலை. நம்ம வீட்டுல எல்லாம், கோயிலுக்கு பய பக்தியோட போகனும்னு சொல்லுவாங்க. இந்த பயபக்திய ஏழாவது மலை ஏறும்போது தான் உணர முடியும். ஏன்னா, மிகவும் செங்குத்தான மலை. ஊர்ந்தும் தவழ்ந்தும் தான் போகனும். தவறி விழுந்தா பள்ளத்தாக்கு. அப்படியே அரைமணி நேரம், குறிஞ்சி மலர்களுக்கு நடுவே சென்றால் நாம் அடைவது வெள்ளியங்கிரி ஆண்டவரின் சன்னதியை!!
வெள்ளியங்கிரி ஆண்டவரின் சன்னதி, இரண்டு கற்களுக்கு நடுவே அமைந்திருக்கும். அங்கே ஒரு சின்ன சிவலிங்கம், ஒரு பெரியவர் தீப ஆராதனை காட்டி திருநீறு தருவார். இறைவன் சன்னதியில் இருந்து வெளியே வரும்போது, நமது உடலும் உள்ளமும் சுத்தமாக இருப்பதை உணர முடியும். 
அப்படியே மலையில் இருந்து கீழே இறங்க ஆரம்பித்தால், இரவில் தடவிக்கொண்டே வந்ததெல்லாம் பச்சைப்பசேல்!!
காலை எட்டு மணிக்குள் அடிவாரத்திற்கு சேர்ந்து விட்டால் முதல் மலையில் படிக்கட்டுச் சூட்டில் இருந்து தப்பிக்கலாம். மீண்டும் செல்போன் சத்தம், இறைச்சல்!!
வெள்ளியங்கிரி மலைக்குச் சென்று வந்தால் ஒருவர் ஆரோக்கியமாக இருக்கிறார் என்று நினைத்துக் கொள்ளலாம்!! " நீங்க ஆரோக்கியமானவரா?"
*****************************************************************************
வெள்ளியங்கிரி மலைக்குச் செல்ல - கோவை காந்திபுரம் மற்றும் உக்கடம் பேருந்து நிலையங்களில் இருந்து சித்திரா பௌர்னமிக்குப் பிறகு இரண்டு வாரத்திற்கு, இரவு 8 மணி முதல் சிறப்புப் பேருந்துகள் கிடைக்கும். வெள்ளியங்கிரி மலையைப் பற்றி மேலும் தெரிந்து கொள்ள கோவையில் உள்ள நண்பர்களையோ, நண்பர்களின் தந்தையையோ தாத்தாவையோ கேளுங்கள்!!
....


20 comments:
Dear Senthil,
By reading this article,
I felt, i went there.
fantastic informations
Regards,
Rajesh-Mettupalayam
அருமையான விவரிப்பு செந்தில். அப்படியே மலைக்கு போய்வந்ததாக உணர்ந்தேன். அடிவாரம் வரை தான் சென்றுள்ளேன் கண்டிப்பாக ஒரு முறை செல்லவேண்டும் என்று தோன்றுகிறது.
You bring the sceneries to our eyes, thru your writing and I understand that the hard work behind that!!!!Highly appreciated Senthil!!!
@Rajesh - நீங்க மேட்டுப்பாளையத்தில் இருக்கிறீர்கள் என்றால் ஒருமுறை சென்று பாருங்கள்!!
@ KRICONS - அனைவரும் செல்ல வேண்டிய ஒரு இடம் இந்த மலை..
@ Veera - என்னோட அனுபவத்த பகிர நினைத்தேன் அவ்ளோ தான்!! என் தந்தை இந்த மலைக்கு 15 முறை சென்றுள்ளாராம். நான் சென்றதோ இரண்டு முறை தான்.
amazing vela! good naration
Senthil, Really i eager to go there. If not also i felt i went over there. Nice. God is Great. Bala mams.
Hi Senthil, unmayil, solla ninachedha yellam, mathavanga commentsla sollittanga... Azhghaana vivarippugal.. Malayin kaatru vandhu thottadhu madhiri irundhadhu ...
Keep writing
Uma Senthil
hi senthil, nalla irukkupa, ellorum comment pannittanga. malaiku poradha vida unnoda vivarippugal alaguppa. orumurai kandippa poganum, appo unnoda indha article thaan ninaivil irukkum.
keep it up.
vazthukkal.
i went 3 times to that place...
its really awesome
பலமுறை சென்றிருக்கிறேன். பத்து வருடங்களுக்கு முன்னர்.
மீண்டும் போக எண்ணம், எப்போது சூழ்நிலை அமையும். தெரியவில்லை!!
not only chitra pournami days. All amavasya people are going. Spl buses are there. Other days also peple are going. But few.
now i feal i wana go thar supper explain senthil thanks senthil...
Hi Senthil,
Very Nice information, can you kindly advice me when they allow to go upper hills
நல்ல பதிவு நண்பா !வாழ்த்துக்கள் !
hi senthil...thanks for giving this article.. now i am earnetness and enthusiasm to see vellaigiri..
Truly a wonderful place...
i went this south kailasham more than 10 times but every trip i feel new experience
i climbed this hill on 3rd of August.
it was full of mist surrounded me when i reached 5th hill. I could not go further when i stepped my foot at 6th hill. There was flowing dew kept the soil drifty.. before i reached.
And it was 3Am. I was alone.
As you said its not season to climb the hill apart from our deity. the skill of living with nature teaching us to adapt certain things on the hill. i could not see any terrible animals.. but i walked alone. it was not explainable.. the things i observed ... while climbing top and to foot...
வெள்ளியங்கிரி மலை பயணம் மறக்க முடியாத ஒர் சாகச அனுபவம் நாகப் பாம்பு காட்டுப்பன்றி, நரி, காட்டெருமை இவைகளைக் கண்டுவிட்டு திகிலோடு சென்ற பயணம்,
உச்சி மலையில் உறையவைக்கும் குளிர் என எல்லாவற்றையும் தாண்டி இறங்கும் போது யாருமில்லாத காட்டிற்குள் நிம்மதியான உறக்கம்,
அன்று தான் வாழ்வின் நிம்மதியை உணர்ந்தேன்,
good day senthil,
i am karthik,
studied ur info about velliangiri hill,
planned to go this pournami on may 24th,
is it apossible to go or only chitra pournami is allowed,
what time to start the travel from adivaram
is there any contact no's to ask about the trip,
marinekarthikeyan@gmail.com
is my mail id,
can u please advice
Post a Comment