Thursday, August 6, 2009

கானல் நீர் - அறிந்ததும் அறியாததும்!

உங்களுக்குக் காப்பி குடிக்கப் பிடிக்குமா? உங்களிடம் ஒரு கேள்வி!

நீங்கள் குடிக்கும் காப்பியில் எத்தனை லிட்டர் தண்ணீர் உள்ளது தெரியுமா?

ஒரு தேக்கரண்டி காப்பியைத் தயாரிக்க 150 லிட்டர் தண்ணீர் தேவைப்படுமாம்!

எப்படி?

காப்பிச் செடியைப் பயிரிடுவதில் இருந்து, நமக்கு வீட்டில் குடிக்கும் பக்குவத்தில் வந்து சேரும் வரை செலவாகும் தண்ணீர் தான் மேலே குறிப்பிட்ட 150 லிட்டர். இதை ஆங்கிலத்தில் VIRTUAL WATER ( கானல் நீர் ) என்னும் சொல்லால் குறிப்பிடலாம்.

ஒரு பொருளைப் தயாரிப்பதில் உற்பத்தியாகும் எரிவாயுவைக் கார்பன் கால்தடம் (CARBON FOOTPRINT) என்பதைப் போல, செலவாகும் நீரின் அளவை நீர்க் கால்தடம் ( WATER FOOTPRINT) என்று கூறுகிறார்கள்.

நாம் பயன்படுத்தும் சில பொருள்களின் நீர்க் கால்தடம் கீழே...
* ஒரு காரைத் தயாரிக்க தோராயமாக 150000 லிட்டர் தண்ணீர் செலவாகிறதாம்.
* ஒரு கிலோ மாட்டுக்கறியைத் தயாரிக்க 15000 லிட்டர் தண்ணீர் தேவைப்படுமாம்.
* ஒரு கிலோ அரிசி, கோதுமை போன்ற உணவுப் பொருட்களைத் தயாரிக்க தோராயமாக 1000 முதல் 2000 லிட்டர் வரை தண்ணீர் தேவைப்படுகிறதாம்.

கடந்த வருடத்தில், முன்னனி ஏற்றுமதி நாடுகளின் பட்டியலைப் பார்த்தேன். இந்தியாவின் இடம் மிகவும் கவலைக்குறியாதாகவே உள்ளது.

ஜெர்மனி, பிரான்ஸ், நெதர்லாந்து, இத்தாலி, இங்கிலாந்து, ஜப்பான், ஐக்கிய அரபு நாடுகள், சிங்கப்பூர், நார்வே, சுவீடன் போன்ற நம்மை விடச் சிறிய நாடுகளும் அமெரிக்கா, ரஸ்யா, சீனா, பிராசில், கனடா போன்ற நம்மை விடப் பெரிய நாடுகளும் ஏற்றுமதில் முன்னனியில் உள்ளன.

இதில் நெதர்லாந்து, ஜப்பான், சிங்கப்பூர், நார்வே, சுவீடன் போன்ற நாடுகள், தங்களுக்குத் தேவையான உணவுப்பொருள்களைப் பெரும்பாலும் இறக்குமதியே செய்கின்றன.

அதிகமாக நீர் தேவைப்படும் உணவுப்பொருள்கள், ஆடை உற்பத்தி மற்றும் இதர பொருள்களை இந்தியா போன்ற வளரும் நாடுகளில் இருந்து குறைந்த செலவில் (மதிப்பில்) இறக்குமதி செய்துவிட்டு மூளையை மட்டும் மூலதனமாக வைத்துத் தயாரிக்கும் சேவைகளை அதிக மதிப்பில் ஏற்றுமதி செய்வதை நாம் அறிவோமா?

இந்தியாவில் நாமோ ஒரு இடத்தில் காப்பி, தேயிலை, பருத்தி உற்பத்தி, தோல் பொருள்கள் தயாரிப்பு மற்றும் இதர தாணிய வகைகள் என உற்பத்தி செய்ய அதிகளவு தண்ணீரை செலவழித்து விட்டு, இன்னொரு இடத்தில் குடிக்கவே தண்ணீர் இல்லை என்ற நிலையில் உள்ளோம்!


மேலே உள்ள படத்தில் பச்சை வண்ணத்தில் உள்ள நாடுகளில் தண்ணீர் கால்தடம் குறைவாக உள்ளதையும் சிவப்பு வண்ணத்தில் உள்ள நாடுகளில் தண்ணீர் கால்த்தடம் அதிகமாக உள்ளதையும் காணலாம். பச்சையில் உள்ள நாடுகளில் இருந்து தான் சிவப்பு வண்ணத்தில் உள்ள நாடுகளுக்கு உணவு தாணியங்கள் ஏற்றுமதியாகிறதாம்! குறைந்த விலைக்கு!!

கச்சா எண்ணெயை அதிக விலை கொடுத்து நாம் வாங்குவதப் போல நம் நாட்டில் அதிகமான நீரைச் செலவழித்துத் உற்பத்தி செய்யும் பொருட்களை அதிக விலையில் விற்றால் எப்படி இருக்கும்?

இப்படி ஒரு காலம் வருமா என்றால் அதற்கான அறிகுறிகள் லேசாக தெரிய ஆரம்பித்திருக்கிறது என்று தான் சொல்ல வேண்டும்.

ஒவ்வொரு பொருளும் நுகர்வோரின் கைகளில் வந்து சேரும் வரை செலவாகும் நீரின் ( நீர்க் கால்தடம் ) அளவை விற்பனை அட்டையில் அச்சிட வேண்டும் என்று ஐரோப்பாவில் உள்ள சுற்றுச்சூழல் நிறுவனங்கள் கூற ஆரம்பித்திருக்கிறார்கள்.

சரி இப்படி அச்சிடுவதால் என்ன பயன்?

நுகர்வோரான நமக்கு ஏற்படவிருக்கும் விழிப்புணர்ச்சி தான் மிகப்பெரிய பயன். நாம் அன்றாடம் குடிக்கும் காப்பியைத் தயாரிக்க 300 லிட்டர் தண்ணீர் செலவாகிறது என்றால் குடிக்கும் நமக்கு அதிர்ச்சியாகத்தானே இருக்கும்! நாம் பயன்படுத்தும் பொருள்களையும், அதனை உற்பத்தி செய்யும் நிறுவனங்களின் சுற்றுச்சூழல் பற்றிய அக்கறையும் தெரிய ஆரம்பிக்கும்.



இன்று பிரபல பன்னாட்டு நிறுவனங்களின் புட்டியில் அடைத்த குடிநீரின் விலை 1 லிட்டர் 12 ரூபாய் என்பதை நினைத்துப் பார்க்க எப்படி உள்ளது? ஆனால் ஐரோப்பாவில் தயாராகும் ஏவியன் நிறுவனத்தின் குடிநீரின் விலையோ 1 லிட்டர் 150 ரூபாய்! இதிலிருந்தே தெரிகிறதே அவர்கள் தெளிவாக உள்ளார்கள் என்று!

இதே போல ஒவ்வொரு பொருளையும் நாம் பார்க்க ஆரம்பிக்கும் போது நீரின் அருமையும், வளரும் நாடுகளுக்கு நேர்ந்து வரும் அநீதி பற்றிய விழிப்புணர்வும் சிறுதுளிகளாகப் பரவ ஆரம்பிக்கும்!

சிறுதுளிகள் தானே பெருவெள்ளமாகிறது!
உங்கள் கருத்துகளைக் கீழே பகிருங்கள்!
உங்களுக்கு இந்தப் பதிவு பிடித்திருந்தால் மறக்காமல் தமிழ்மணத்தில் வாக்களிக்கவும்

18 comments:

geethappriyan said...

பதிவு அருமை
அதுதான்
நம்ம நாடு தண்ணீர் தேசமா?......
மேலைநாடுகள் எப்போதும் விவரம் தானுங்க..
நம்ம ஆட்கள் எவ்ளோ பேர சாப்ட் வேர் படிக்க வைச்சிட்டு இப்போ தலைய பிக்க வைச்சிட்டான் பாருங்க
எனக்கு தெரிஞ்சே ஆறு நண்பர்கள் திரும்பி வேலை போய் திரும்பிவிட்டனர்
இதுக்கு பேர் தான் அடுத்தவன் தலையில் மிளகாய் அரைப்பது..

சரவணகுமரன் said...

நல்ல பதிவு... நன்றி...

Cable சங்கர் said...

arumai

ஈரோடு கதிர் said...

செந்தில் மிக நுணுக்கமாக
அலசியிருக்கிறீகள்.
நம்மிடமிருந்து இறக்குமதி செய்யும்
நாடுகள் தங்கள் தண்ணீரை பத்திரப்படுத்திக்கொண்டு
இந்தியா போன்ற நாடுகளின் தண்ணீர் வளத்தை சுரண்டுகிறார்கள்..

தொடர்ந்து இது போல் எழுதுங்கள்
என்றாவது ஒருநாள் நிச்சயம் விடியும்

அது ஒரு கனாக் காலம் said...

அருமையான பதிவு, ... ஒரு காலத்தில் நம் வாழ்க்கை மிக எளிமையாக , அருகில் கிடைக்கும் பொருளை வைத்தே காலத்தை தள்ளி கொண்டிருந்தோம் ... ( இந்தியாவில் )... இப்போ, ......????

அருமையான பதிவு , நல்லா எழுதி இருக்கீங்க

சென்ஷி said...

மிகச்சிறப்பான பதிவு செந்தில். நிறைய்ய புதிய விவரங்களை தெரிந்துகொண்டேன்

Unknown said...

fantastic..........

ச.செந்தில்வேலன் / S.Senthilvelan said...

வாங்க கார்த்திகேயன்! நீங்க சொல்றது உண்மை தான்..

ச.செந்தில்வேலன் / S.Senthilvelan said...

வாங்க சரவணகுமரன்.

வாங்க கேபிள் சங்கர்

வருகைக்கும் பாராட்டிற்கும் நன்றி

ச.செந்தில்வேலன் / S.Senthilvelan said...

வாங்க கதிர். அவங்க தண்ணிய மட்டும் பத்திரபடுத்தறது இல்லீங்க.. அவங்க காத்து, உடலுழைப்பு எல்லாத்தையும் தான்!

ச.செந்தில்வேலன் / S.Senthilvelan said...

//
அது ஒரு கனாக் காலம் said...
அருமையான பதிவு, ... ஒரு காலத்தில் நம் வாழ்க்கை மிக எளிமையாக , அருகில் கிடைக்கும் பொருளை வைத்தே காலத்தை தள்ளி கொண்டிருந்தோம் ... ( இந்தியாவில் )... இப்போ, ......????
//

வாங்க சுந்தர் சார்.. நமக்கு தான் வெளிநாட்டு மோகமாச்சே.. அப்புறம் எங்க இருக்கறத வச்சு வாழ்க்கை நடத்தறது

ச.செந்தில்வேலன் / S.Senthilvelan said...

வாங்க சென்ஷி..

வாங்க பிரதீப்..

வருகைக்கும் பாராட்டிற்கும் நன்றி!

கோபிநாத் said...

புதிய தகவல்கள் தல...;)

கலக்குறிங்க ;)

Ashok D said...

nice one

சிதம்பரம் said...

ஒரு காப்பில இவ்வளவு விசயம் இருக்குதுதா?? ...அருமையான பயனுள்ள பதிவு செந்தில்

கலையரசன் said...

அருமையா பகிர்வு நண்பா... எங்கிருந்துதான் இந்த மேட்டரெல்லாம் புடிக்கிறியோ?

கார்த்திக் said...

அருமையான பதிவு.. எப்பொழுதும் நாம் ஏமாறுவது வாடிக்கை தான்..

Unknown said...

இப்படியே ஒவ்வொரு செல்வமா பறிகொடுத்துட்டு இருக்குறதா நினைச்சா கவலையா இருக்குங்க..

Related Posts with Thumbnails