Saturday, February 6, 2010

வாழும் வரலாற்றுத் தலங்கள் - 1 - மச்சு பிச்சு

ரலாறு என்றவுடன் நமக்கு நினைவிற்கு வருவன எவை? முன்னோர்களின் வாழ்க்கை முறை, மன்னர்களின் ஆட்சிமுறை, பண்பாட்டுச் சின்னங்கள், உருவாக்கிய நகரங்கள், கோட்டைகள், மாளிகைகள் போன்றவற்றைக் கூறலாம். இவற்றுள் நமக்குப் "பார்த்தவுடனே" பிரமிப்பை ஏற்படுத்துவது வரலாற்றுத் தலங்களே!! 

தமிழகத்தை எடுத்துக் கொண்டால், தஞ்சைப் பெரிய கோவில், தாராசுரம் கோவில், மகாபலிபுரம் சிற்பங்கள் மற்றும் இன்னபிற தலங்கள் நம் முன்னோர்களின் சிறப்பைப் போற்றுகின்றன. இதே போல உலகெங்கும், வரலாற்றுத் தலங்கள் அந்தந்த நாட்டு முன்னோர்களின் சிறப்பைப் பறைசாற்றி நிற்கின்றன. 

இது போன்ற வரலாற்றுத் தலங்களை அறிமுகப்படுத்துவதே இத்தொடரின் குறிக்கோள்!! 

o

மச்சு பிச்சு!!






தென்னமெரிக்க நாடான பெருவில் பதினைந்தாம் நூற்றாண்டில் கட்டப்பட்ட நகரம் தான் மச்சு பிச்சு!! செங்குத்தான ஆண்டிஸ் மலைத்தொடரில், கடல் மட்டத்திற்கு மேல் 2400 மீட்டர் உயரத்தில் கொண்ட   "இன்கா பேரரசால்" கட்டப்பட்டது. ( நம் ஊட்டி, கொடைக்கானல் போன்ற ஊர்கள் கிட்டத்தட்ட இந்த உயரம் தான்!!) 

பச்சாகுட்டி (Pachakuti) என்ற இன்கா மன்னரின் ஆட்சிக்காலத்தில் இந்த நகரம் கட்டப்பட்டிருக்கிறது. பழங்காலத்தில், மலைகளின் நடுவே மக்கள் வாழ்க்கை நடத்தியிருந்தாலும் "மச்சு பிச்சு" நகரத்திற்கு மட்டும் அப்படி என்ன தனிச்சிறப்பு?

செங்குத்தான மலைத்தொடரின் உச்சியில் 1000 பேர் வாழும்படியாக ஒரு நகரத்தை உருவாக்கியிருக்கிறார்கள். அந்தக் காலத்தில் இப்பொழுது இருக்குமளவிற்கு தொழில்நுட்ப வசதிகள் எதுவும் இல்லாத பொழுது எப்படி நிர்மானித்தார்கள்? மக்களின் உழைப்பை மட்டுமே அடிப்படையாகக் கொண்டு மலை உச்சியில் ஒரு நகரம் அமைப்பதென்பது அதிசயமானதே!!



சீனப் பெருஞ்சுவரும் மலை உச்சியில் தான் கட்டப்பட்டதென்றாலும், அவை மங்கோலியப் படையெடுப்பைத் தடுப்பதற்காகவே பயன்பட்டது. ஆனால் மச்சு பிச்சு நகரமோ, அடர்ந்த காட்டுக்குள்ளே யாரும் எளிதில் அடைய முடியாத இடத்தில்!! இந்நகரத்தில் அமைக்கப்பட்டுள்ள அமைப்புகள், கற்களால் ஆன வடிவங்கள் ஏதோ சூரிய அல்லது இறை வழிபாட்டிற்கான இடமாக இருந்திருக்கலாம் என்றும் கருதுகிறார்கள். 

தேயிலைத் தோட்டங்களில் படிப்படியாக பயிரைச் சாகுபடி செய்ய அமைக்கப்பட்டிருப்பதைப் போல மலைச்சரிவில் படிப்படியாக கட்டடங்களை கட்டியிருப்பது இன்கா மக்களின் கலாச்சாரத்தைப் போற்றுகிறது. மழைக்காலத்தில் வெள்ளத்தால் கட்டடங்கள் அடித்துச் செல்லாமல் இருக்கும் படியாக வடிகால்களையும், விவசாயத்திற்குத் தேவையான நீர் ஆதாரங்களையும் உருவாக்கியிருப்பது வியப்பளிக்கிறது.



இவ்வளவு சிறப்பாக ஒரு நகரை உருவாக்கிய இன்கா பேரரசு என்ன ஆனது?


பெரு நாட்டின் மீது ஸ்பானிஷ் படைகள் தாக்குதல் நடத்தியதால் தப்பி ஓடிய இன்கா மக்கள் கஸ்கா என்ற தங்கள் நகரத்தை விட்டு அடர் காடுகள், பள்ளத்தாக்குகளில் தஞ்சம் புகுந்தனர். கஸ்கா ஸ்பானியர்களின் ஆக்கிரமிப்புக்குள் போனது. காட்டுக்குள் தங்கிய இன்கா மக்களை ஸ்பானிஷ் படை நெருங்க முடியாமல் விலகி விட்டது. ஆனால் கானகத்தில் நுழைந்த இன்கா மக்கள் தங்களுக்கென ஒரு பெரிய நகரை காட்டுக்குள்ளேயே நிர்மாணித்தனர். வில்கபாம்பா என அவர்கள் அந்த நகருக்குப் பெயரிட்டனர். நகரை நிர்மாணித்த இன்கா மக்கள் தங்களுடைய நிம்மதியான வாழ்க்கையைக் கெடுத்த ஸ்பானியர்களுக்கு சண்டை, போர் என குடைச்சல் கொடுத்துக் கொண்டே இருந்தனர்.

ஸ்பானியர்களும் திரும்பித் தாக்கிக் கொண்டே இருந்தார்கள். சுமார் முப்பத்து ஆறு ஆண்டுகள் இந்த சண்டை விட்டு விட்டு நடந்தது. ஸ்பானியர்கள் கடைசியில் 1572ல் மாபெரும் கொடூரத் தாக்குதலை நிகழ்த்தினார்கள். இன்கா மக்களை வயது, பாலியல் வேறுபாடு ஏதுமின்றி கொன்று குவிக்க ஆரம்பித்தார்கள். போராளிகள் மட்டுமன்றி கண்ணில் பட்ட அனைவருமே படுகொலை செய்யப்பட்டனர். ஸ்பானிய படைகள் கடைசியில் வில்காபாமாவையும் தாக்கியது. இன்கா மக்களின் கடைசி மன்னன் துப்பாக் அமாரு சிறை பிடிக்கப்பட்டான். மன்னனைச் சிறைப்பிடித்த ஸ்பானியர்கள் அவரை கஸ்கோ நகருக்குக் கொண்டு பிளாசா டி ஆர்மாஸ் என்னுமிடத்தில் வந்து படுகொலை செய்தனர்.


ஸ்பானியர்களின் படையெடுப்பின் காரணமாக இன்கா பேரரசு முழுவதும் சிதைக்கப்பட்டு மக்கள் சிதரடிக்கப்பட்டனர். இப்படி ஐரோப்பியர்களின் படையெடுப்பின் காரணமாக உலகெங்கும் அழிந்த கலாச்சாரங்கள் எத்தனையோ?


இன்கா பேரரசை ஸ்பானியர்கள் கைப்பற்றியதில் இருந்து, இப்படி ஒரு நகரம் இருப்பது தெரியாததால் கைவிடப்பட்ட நிலையில் இருந்து வந்தது "மச்சு பிச்சு".  பல நூற்றாண்டுகளாக மறக்கப்பட்டிருந்த இந்த நகரத்தை 1911 இல் அமெரிக்க வரலாற்றியலாளர் ஹிராம் பிங்கம் என்பவர் மீளக் கண்டுபிடித்தார். அதன் பின்னர் இது ஒரு சுற்றுலாப் பயணிகளின் ஒரு முக்கிய இடமாக மாற்றப்பட்டது. 1983 முதல் யுனெஸ்கோ அமைப்பின் கலாச்சார சிறப்புமிக்க இடங்களின் பட்டியலில் சேர்க்கப்பட்டது.



மச்சு பிச்சு நகரிற்குச் செல்ல குஸ்கோ என்னும் நகரில் இருந்து ஒல்லாண்டயடம்போ என்னும் இடத்திற்கு ரயிலிலும், பிறகு மலைகளின் சரிவில் உள்ள பேருந்து பயணம் மூலம் இடத்தைச் சென்றடைய முடியும்!! 2007ல், புதிய 7 உலக அதிசயங்கள் பட்டியலை சுவிஸ் நாட்டைச் சேர்ந்த அமைப்பு தேர்ந்தெடுத்த பொழுது இந்த வரலாற்றுச் சின்னம் நமக்கு அறிமுகமானது. 

தென்னமெரிக்க நாடுகளில் நம்மவர்கள் பணியாற்றி வந்தால் கண்டிப்பாகப் பார்க்க வேண்டிய இடத்தில் மச்சு பிச்சுவைச் சேர்த்தாக வேண்டும்!!

இந்தத் தலத்தைப் பற்றிய ஜியாகரபிக் சேனலின் காணொளி கீழே..



உங்கள் கருத்துகளைப் பதிவு செய்ய மறக்காதீர்கள்!!
..

26 comments:

பழமைபேசி said...

இரசித்தேன்.... சக பதிவரும், நண்பருமான பெருசு அங்கதான் இருக்காருங்க தம்பி!

ஆரூரன் விசுவநாதன் said...

அறிமுகமில்லாத பல இடங்களை அறிமுகப்படுத்தும் இந்த இடுகை நல்ல முயற்சி...வாழ்த்துக்கள் செந்தில்

க.பாலாசி said...

மிக ஆச்சர்யமான தகவல்கள்... வரலாற்றில்தான் எத்தனையெத்தனை அதிசயங்கள் நிகழ்ந்திருக்கின்றன. இப்போது நினைத்துப்பார்க்கும்போது பெருமூச்சே விடமுடிகிறது. ஆயினும் அதை கண்டுபிடித்து சுற்றுலாத்தலமாக்கியவர்கள் போற்றுதலுக்குரியவர்கள்..

மிக நல்ல வரலாற்றுப் பகிர்வு... அடுத்தடுத்த இடுகைக்காகவும் காத்திருக்கிறேன்...

vasu balaji said...

very good effort. thank you senthil

சந்தனமுல்லை said...

சுவாரசியமாக இருந்தது..இதுவும் மாயன் கல்ச்சரும் ஒன்றா?

பெருசு said...

நல்ல பதிவு

இது போன்ற பதிவுகள் அவசியம் தேவையான ஒன்று.

தொடர்புடைய பக்கங்களின் தொடர்பு(link) அமைக்க முயற்ச்சிக்கவும்.

sathishsangkavi.blogspot.com said...

இது வரை அறியாத் தகவல்கள் நன்றி செந்தில்....

அது ஒரு கனாக் காலம் said...

அருமையான தகவல்கள்.. பார்க்க வேண்டுமே ... அட்லீஸ்ட் இதை பற்றி இன்னும் நிறைய தெரிந்து கொள்ள வேண்டும்

கார்த்திகைப் பாண்டியன் said...

சூப்பர் டாபிக்க ஆரம்பிச்சு இருக்கீங்க நண்பா.. அடி பின்னுங்க..

Prathap Kumar S. said...

நல்ல பகிர்வு செந்தில், எகிப்து பிரமிடுகள் குறித்து விரைவில் எதிர்பார்க்கிறேன்...

ச.செந்தில்வேலன் / S.Senthilvelan said...

@ பழமைபேசி,

நன்றிங்க! பிகேபி அவர்களும் இங்கே பின்னூட்டமிட்டுள்ளார்.

@ ஆரூரன் விசுவநாதன்,

நன்றிங்க ஆரூரன்.

க. பாலாசி,

நன்றிங்க பாலாசி. உங்கள் ஊக்குவிப்பால் தொடரும் இந்தத் தொடர்.

ச.செந்தில்வேலன் / S.Senthilvelan said...

@ வானம்பாடிகள்,

நன்றிங்க பாலாண்ணே.

@ சந்தனமுல்லை,

நன்றிங்க. இல்லை மாயன் கலாச்சாரம் மத்திய அமெரிக்க நாடுகளான நிகராகுவா, பனாமா அருகில் இருந்தது. இன்காஸ் பெரு, ஈக்குவாடார் நாடுகளில் ஆண்டவர்கள்.

மாயன் கலாச்சாரத்தைப் போற்றும் வரலாற்றுச் சின்னங்களும் வரவிருக்கின்றன.

@ பெருசு.

நன்றிங்க. கண்டிப்பாக தொடர்புடைய பக்கங்களையும் இணைக்கிறேன்.

ச.செந்தில்வேலன் / S.Senthilvelan said...

@ சங்கவி,

நன்றிங்க.

@ அது ஒரு கனாக் காலம்,

நன்றிங்க சுந்தர் சார்.

@ கார்த்திகைப் பாண்டியன்,

நன்றிங்க நண்பரே.

@ நாஞ்சில் பிரதாப்,

நன்றிங்க. கண்டிப்பாக வரும் :)

Starjan (ஸ்டார்ஜன்) said...

அருமையான பதிவு செந்தில்

வரலாற்றுத் தகவல்கள் தெரிந்து கொள்ள வேண்டியது அவசியம் .

geethappriyan said...

மிக அருமையான பதிவு
நிறைய தகவல்கள் பகிர்ந்தமைக்கு நன்றி,
இதுபோல பதிவுகள் எழுத தான் ஆளில்லை,அது இனி தீர்ந்தது.
மச்சுபிச்சுவை டாகுமெண்டரியில் பார்த்தேன்.இப்பொது படித்தும் விட்டேன்.

Chitra said...

மிகவும் அருமையாக, பயனுள்ள தகவல்களுடன் தொகுத்து தந்து இருக்கிறீர்கள். நன்றி. கண்டிப்பாக சென்று பார்க்க வேண்டும்.

கண்ணா.. said...

சும்மா .. பிச்சு பிச்சு உதறிருக்கீங்க....

:)

ஈரோடு கதிர் said...

மிக அருமையான பகிர்வு...

நன்றி செந்தில்

ஹுஸைனம்மா said...

மச்சு பிச்சு, பச்சா குட்டி, இன்கா - பெயர்களே ஈர்க்கின்றன.

தொழில்நுட்ப வளர்ச்சி இல்லாத அக்காலத்தில் செய்யப்பட்ட பிரமிட், தாஜ் மஹல், போன்ற இவைகள் தருவது கணக்கிலடங்கா ஆச்சர்யம். மேலும் வித்தியாசமான தகவல்களை எதிர்பார்த்திருக்கிறேன். நன்றி.

செ.சரவணக்குமார் said...

மச்சு பிச்சு பற்றி பல புதிய தகவல்களை அறிந்துகொண்டேன். பகிர்வுக்கு நன்றி நண்பா. தொடர்ந்து எழுதுங்கள்.

R.Gopi said...

செந்தில்

இங்கு தான், பல கஷ்டங்களுக்கிடையில், எங்கெங்கோ, யார் யாரையோ பிடித்து “எந்திரன்” படத்திற்காக ஒரு டூயட் பாடலை டைரக்டர் ஷங்கர் அவர்கள் படமாக்கி உள்ளார்...

இந்த இடம் தடைசெய்யப்பட பகுதி என்பதால், படப்பிடிப்புக்கு அவ்வளவு கெடுபிடி...

ஜோதிஜி said...

ஸ்பானிஷ்யர்கள் பற்றி மேற்கொண்டு தகவல்கள் இருந்தால் எழுதுங்கள்.

☀நான் ஆதவன்☀ said...

நல்ல பதிவு செந்தில்

ச.செந்தில்வேலன் / S.Senthilvelan said...

@ ஸ்டார்ஜான்,

நன்றிங்க நண்பரே.

@ கார்த்திகேயன்.

ஊக்குவிப்பிற்கு நன்றி.

@ சித்ரா,

சென்று பார்க்க வாழ்த்துகள் :)

@ கண்ணா,

நன்றிங்க.

@ கதிர்,

நன்றிங்க.

@ ஹூசைனம்மா,

நன்றிங்க. கண்டிப்பாகத் தொடரும்.

@ செ. சரவணக்குமார்,

நன்றிங்க.

@ R. Gopi,

நன்றிங்க உங்க செய்திக்கு. அப்போ தலைவர் மச்சு பிச்சுல பிச்சு உதரப்போறார் :)

@ ஜோதிஜி.

நன்றிங்க. முயல்கிறேன் ஸ்பானியர்களைப் பற்றி எழுத..

@ நான் ஆதவன்,

நன்றிங்க.

தாராபுரத்தான் said...

திரும்ப திரும்ப திருமூர்த்தி மலையையே பார்த்து பார்த்து சலிக்காத கண்களுக்கு சலிக்காத விருந்து.

பின்னோக்கி said...

எந்திரன் பட சூட்டிங் எடுத்தார்கள் என்ற அளவிலேயே கேள்விப்பட்டிருந்த இடத்தைப் பற்றி அழகான படங்களுடன் எழுதியிருக்கிறீர்கள். தொடரின் அடுத்த இடத்தை அறியும் ஆவலை ஏற்படுத்திவிட்டீர்கள்.

Related Posts with Thumbnails