Friday, June 5, 2009

டும் டும் டும்!!

இந்த மிருதங்க ஓசை கேட்கறதுக்குள்ள தான் எத்தனை கலாட்டா!! எத்தனை கற்பனைகள்!! எத்தனை எதிர்பார்ப்புகள்!! இதைப்பற்றித்தான் இந்த இடுகை!!

நம்ம வீட்டுலயும் ஒரு பையனோ பெண்ணோ கல்யாண வயசுல இருக்காங்கனு பெற்றோர்களுக்குத் தெரிய வர்ரது, நம்ம பக்கத்து வீட்டு uncle சொல்லியோ அல்லது கல்யாணத்துல சந்திக்கற உறவினர் சொல்லியோ தான்!!

வரன் தேடுவதில் முதலில் வந்து நிற்பது Conditions.. conditionsனு சொன்னா, அது "மணல் கயிறு" படத்துல S.V.Sekar, போட்டதே பரவால்லனு தோணும்!!. அட, நல்லா படிச்ச, அழகா, லட்சனமாங்கறதெல்லம் ரொம்ப basic conditions..

தான் வேலை பார்க்கும் IT sectorல தான் அந்த பெண்ணும் வேலை பார்க்கணும், வீட்டுல ஒரே ஒரு ஆள் தான் இருக்கனும், US போக ரெடியா passport வச்சிருக்கனும், நமக்கு தெரிந்த தம்பதியினர் மாதிரி நமக்கும் அமையும்னு சொல்லீட்டு, broadmindedஆ இருக்க வேணுங்கற மாதிரி conditions.. ( இதுல என்ன beautyன்னா broadmindedness, caring, affectionate, possessiveness எல்லாம் ஒரு அரை மணி நேரம் பெண் பார்க்கும் போது கண்டு பிடிக்க முடியாது :))

இது போதாதுன்னு ஜாதிப்பிரிவு, உட்பிரிவு பொருந்தனும், ஜாதகம் பொருந்தனும், நம்ம தகுதிக்கு (??) தகுந்த மாதிரி இருக்கனும், நம்ம ஊருக்கு பக்கத்துலயே இருக்கனும் ஆனா பையன் வேலை பார்க்கற ஊர்லயே வேலையும் பார்க்கனும், பக்கத்து வீட்டுப்பையனுக்கு போட்டத விட நிறைய போடனும்னு ( ??) பெற்றோர் போடறது ஒரு தனி பட்டியல்!!

இத்தன conditions OK ஆகனும்னா எவ்வளவு iterations, தேவைப்படும்!! பெரிய Research Labல கூட இவ்வளவு iterations நடக்குமாங்கறது சந்தேகம் தான்!!

இதுல எந்த condition ரொம்ப complicatedனா அது ஜாதகம் பொருத்தம் தான்!! நம்ம ஜாதகம் கணிக்கறது நம்ம ஜனன நேரத்த பொருத்துதான். ஒரு 10 நிமிஷம் தவறா குறிச்சிட்டாங்கன்னா, எல்லாமே தலை கீழா மாறிடும். சுருக்கமா சொல்லனும்னா மாட்டாஸ்பத்திரி டாக்ரருக்கும், மாடு மேய்க்கறவருக்கும் ஜாதகதுல 10 நிமிஷம் வித்தியாசம் போதுமாம்.

இப்படி, இந்த ஜாதகத்த எடுத்துட்டு ஜோசியர் கிட்ட போனா, குரு பலம் இல்ல, செவ்வாய் தோசம் இருக்கு, கல்யாண நேரம் வரலம்பாரு :) "அதுக்கு ஏதாவது பரிகாரம் இருக்கான்னு" கேட்டுட்டா போதும், உங்க பையன கூட்டீட்டு ஒரு பத்து கோயிலுக்கு போயிட்டு வாங்கனு ஒரு schedule போட்டு கொடுத்துருவார். கோயிலுக்கே அதிகமா போகாத நம்ம ஆளு "பயபக்தியோட" போயிட்டு வருவாரு.

இன்னும் பணக்காரரா இருந்தாங்கன்னா வீட்டுலயே ஒரு 48 நாள் பூஜைக்கு schedule போட வச்சிருவாங்க!! இந்த காளஹஸ்தி, திரு நாகேஸ்வரம் எல்லாம் தெரிய வருவதே இப்படித்தான்!!

அப்படியே ஒரு ஆறேழு மாசம் தேடியும் எதுவும் அமையலனா, அதே பக்கத்து வீட்டு uncle, "வைத்தீஸ்வரன் கோயில்னு ஒரு ஊரு கும்பகோனம் பக்கத்துல இருக்கு, நாடி படிக்கறதுல ரொம்ப famous அப்படியே ஒருக்கா போயிட்டு வந்தீங்கன்னா நல்ல இருக்கும்னு" போட்டு வச்சிருவார்..

அந்த ஊருக்குப் போய் பார்த்தா, எங்க பார்த்தாலும் "அகஸ்திய நாடி ஜோதிடம்னு" board இருக்கும். அங்க இருக்கும் எல்லோருமே, "தாங்க தான் அகஸ்தியரோட வாரிசுனு" சொல்லி குழப்புவாங்க!!

சரின்னு ஒரு இடத்துக்குப் போனா, hotel menu card மாறி ஒரு அட்டை கொடுப்பாங்க. பொது -500/- வேலை - 500/-, திருமணம் -500/- அப்படி.. சரி ஏதோ பொதுவா பாருங்கனு சொன்னா, பல விவரங்களையும் சரியும் தவறுமா சொல்லி கடைசில, "முன் ஜென்மத்துல உங்க மகன் பேரு நாகேஸ்வர ராவு, மத்த இத்யாதி இத்யாதி.... எல்லாம் சொல்லி, உங்க மகன் பல பெண்கள ஜல்ஸா பண்ணி ஏமாத்தீட்டாரு, அந்த பாவத்தால தான் திருமணம் நேரம் தள்ளிப்போகுதுனு" சொல்லி, பரிகாரமா திரும்பவும் ஒரு 8 கோயிலுக்கு போயிட்டு வர சொல்லுவாங்க!!

என்னடா, இத்தன நாளா தேடிட்டு இருக்கறாங்க ஒன்னும் அமையலயேன்னு, நம்ம ஆளு HINDU Newspaper, Classifieds, பார்க்க ஆரம்பிச்சா, ஒன்னு எல்லாம் நம்ம வாங்கறத விட ரெண்டு மடங்கு சம்பளம் அதிகமா வாங்கற மாதிரி இருக்கும், இல்லேன்னா, எல்லாம் நம்ம வயச விட அதிகமா இருக்கும்!!

நம்ம விளம்பரத்த பார்த்து, ஒரு 50, 100 postcard வரும்.. எல்லாம் திருமண தகவல் மையங்கள் தான் :) அதுல ஏதாவது ஒன்னப்போய்ப் பார்த்தா, மேஜை முழுக்க ஜாதகம் இருக்கறதாகவும், ஒரு 500/- கட்டி member ஆகீட்டீங்கன்னா, உங்களுக்கு நாங்க வரன் வரும்போது சொல்லி வைக்கிறோம்பாங்க..(அந்த மேஜைல இருக்கறதுல முக்காவாசிக்கு கல்யாணம் ஆகியிருக்கும்!! )

இதுல இன்னோரு type என்னன்னா, அதே விளம்பரத்த பார்த்துட்டு வீடடுக்கு தரகர்கள் வர ஆரம்பிப்பாங்க!! "நிறைய நல்ல இடம் இருக்கு, நல்ல செய்வாங்க, அவங்க போடற சவரனுக்கு தகுந்த மாதிரி சவரனுக்கு 200/- commission கொடுத்திடுங்க"ம்பாங்க. வீட்டுக்கு வருகிற ஒவ்வொரு தரகருக்கும் பஸ் செலவுக்கு 100/- தர்ரது வேற கணக்கு!!


இப்படி பெற்றோர்க்கு ஒரு கவலைன்னா, பசங்களுக்கு வேற மாதிரி கவலை!! கல்யாணத்துக்கு முன்னாடி, மாலை நேரத்தில TV பார்த்தா, பீதி கிளப்புறதுக்குனு ஒரு கூட்டம் திரியறது வேற விஷயம்!! அதாங்க 7-8 தலைமுறையா சித்த மருத்துவம் பார்த்து வருவதாகவும், கல்யாணத்துக்கு முன்னாடி ஒரு முறை எங்க அலுவலகதுக்கு வந்து "அந்த" மாதிரி ஏதாவது குறை இருக்கானு check பண்ண சொல்லி பயமுறுத்தி சம்பாதிக்கறதுக்குனு ஒரு தனி கூட்டம்!!


நம்ம ஆளு net பக்கம் போனா எங்கே பார்த்தாலும் Matrimony site விளம்பரம் தான்!! அங்க நடக்கறது தனிக்கூத்து!! சரி நம்மளும் தேடுவோம்னு register பண்ணி பார்த்தா, fotoவோட இருக்கற profile 10% கூட இருக்காது.. பிறகு எப்படி தேடறது? foto போடறது ஒரு தனி கதை!! stamp size foto, சின்ன வயசு foto, photoshop touched foto இப்படி!!

ஒரு வழியாக எல்லா வகையிலும் திருப்தி அடைந்து, பெண் பார்க்கச் சென்றால், எவ்வாறு தேர்வு செய்வது என்பது ஒரு தனி குழப்பம்!! பார்த்த பெண் கனிவாக பேசுகிறாரா?என்பதைத் தவிர வேறு எதையும், கணிக்கவோ முடிவு செய்ய முடியாது என்பது தான் உன்மை!!

இந்த மாதிரி பல கல்யாண கூத்துகள் நம்ம ஊருல இருந்தாலும், எப்படி arranged marriage?ன்னு பல கேள்விகள் இருந்தாலும், இது தான் time tested formulaவா இருக்கு!!

இந்த மாதிரி arranged marriage நடக்கலைன்னா, western countriesல பார்க்கறது மாதிரி, கல்யாணம் ஆகாதோர் எண்ணிக்கை நம் நாட்டில் பல மடங்கு அதிகரித்து விடும்!! இப்படி, ஒரு கல்யாணம் நடந்ததோட முடியுதா கூத்து?,............. அடுத்து ஒரு கேள்வி இருக்கே நம்ம உறவினர்கள் கிட்ட readya, "ஏதாவது விஷேஷம் உண்டா?" "அங்க ஆரம்பிக்குது அடுத்த round கூத்து :)!!"

TailPiece: கொஞ்சம் சீக்கிரம் கல்யாணத்த முடிக்கணும்னு ஆசை இருந்தா, குறுகிய வட்டத்துக்குள்ள தேடாம, பெரிய வலையா போடறது நல்லது :) More Conditions, More Iterations ;) !!


இந்த பதிவு உங்களுக்குப் பிடித்திருந்தால் மறக்காமல் ஓட்டுப் போடுங்கள்

7 comments:

பழமைபேசி said...

நிறைய இடுகைகள் வெச்சிருக்கீங்க... எல்லாம் படிச்சி பார்க்குறேன்!

நாகு (Nagu) said...

சும்மா உங்க பக்கத்துல எட்டிப் பாக்கலாம்னு வந்தேன். ஆமாம் கிறுக்கல்களுக்கும், பக்கங்களுக்கும் என்ன வித்தியாசம்? (உங்க ரெண்டு வலைப்பதிவு பத்திதான் கேக்கறேன். :-)

ச.செந்தில்வேலன் / S.Senthilvelan said...

//நாகு (Nagu) said...
சும்மா உங்க பக்கத்துல எட்டிப் பாக்கலாம்னு வந்தேன். ஆமாம் கிறுக்கல்களுக்கும், பக்கங்களுக்கும் என்ன வித்தியாசம்? (உங்க ரெண்டு வலைப்பதிவு பத்திதான் கேக்கறேன். :-)
//

இரண்டிற்கும் "தற்போது" பெரிய வித்தியாசம் இல்லை தான்.. கிறுக்கல்களை displayல் இருந்து நீக்கவுள்ளேன்.. குறிப்பிட்டதற்கு நன்றி.

Anonymous said...

enna thaan panna solringa?
naanga ellam romba naalaa varan thedara jaathi.
jaathakam vena, jaathi vena, eppadi sonnaalum ethuvum amaila.

ithula neenga sonna maathiri niraya koil poka sonnanga. ellathukkum tata vaichutu wait panran

சோழன் said...

ஹே யு ஒய் ப்ளட் ? சேம் ப்ளட்
ஹையோ ஹையோ !!!!

Ebinesar said...

WHY BLOOOD!!!!

AH AHA

SAME BLOOD !!!!

Ebinesar said...

WHY BLOOD!!

HAHAHAAAAAAA

SAME BLOOD !!!!

Related Posts with Thumbnails